தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : சிபிஎஸ்இ அதிரடி


நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் இதுவரை வசூலித்த கட்டண விவரங்கள், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கிராமங்களிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் நியாயமற்ற முறையிலும் , மறைமுகமாகவும் பெருமளவு பணம் வசூலிக்கப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்குமாறு இடைநிலைக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவரங்களை சமர்ப்பிப்பதற்கு கால அளவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், மறைமுக கட்டணங்களின்றி முறையாக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

Source: tamil.samayam.com